சசிகலா மீது எஃப்ஐஆர்.. மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் புகாரில் நடவடிக்கை

 சசிகலாவின் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிரட்டல்களை விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மற்றும் 500 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு.



சிறையில் இருந்து வெளியான சசிகலா தமிழக அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்து அமைதியாகிவிட்டார்.


சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்து அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் அதிமுகவினர் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.


இருப்பினும், சசியின் ஆடியோ ரிலீஸ் பணி நிற்கவில்லை. இதற்கிடையே, சசிகலாவை விமர்சித்ததால் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் உள்ள ரோஷனை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Comments